சென்னை:
தமிழக சட்டசபையின் 2020-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி முடிக்கப்பட்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஜனவரி 6-ம் தேதி பதவியேற்கிறார்கள்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதால், பேரவையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 6-ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் 10-ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.