பிலிப்பைன்சில் உள்ள தமிழக மாணவர்களை மீட்டு வர நடவடிக்கை;ஆர்.பி.உதயகுமார்


ஈரானில் சிக்கியுள்ள மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்சில் உள்ள தமிழக மாணவர்களுக்கு உணவு,மருத்துவ வசதி வழங்கப்படுவதா கவும், அவர்களை விரைவில்மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாகவும் பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.


சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆஸ்டின், காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர்தமிமுன் அன்சாரி ஆகியோர், ஈரானில் சிக்கியுள்ள மீனவர்கள், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசி யாவில் சிக்கியுள்ள மருத்துவ மாணவர்களை மீட்டு தமிழகம் கொண்டுவர வேண்டும். அல்லது அவர்க ளுக்கு பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் உணவு அளிக்க வேண்டும். இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசின் கவனத் துக்கு கொண்டுவந்தனர்.


இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியது:


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணி லாவில் இந்திய மாணவர்கள் தவித்து வருவதாக உறுப்பினர்கள் கூறியிருப்பதைப் போல், சமூக வலைதளங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிலிப் பைன்சில் உள்ள மணிலாவில் இந்திய மாணவர்களுக்கு தேவை யான உணவு வழங்கவும், அவர் களை தமிழகத்துக்கு கொண்டுவர, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதோடு வெளியு றவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்தையும் முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள 200 மாணவர்களை அழைத்துவருவதற்கு கடந்த 17-ம் தேதி தமிழக அதிகாரிகள் மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சகம் மற்றும் கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள் வாயிலாக கோலாலம்பூரில் சிக்கித் தவித்த170 மாணவர்கள் விசாகப்பட்டினத் துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். முதல்வர் எடுத்த துரித நடவடிக் கைகளுக்கு இது சான்றாகும்.


அதேபோல் ஈரானில் கிஷ், சிசுரோ உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் சிக்கியுள்ள 2 ஆயிரம் இந்தியர்களில் 659 தமிழக மீனவர்களை மீட்க முதல்வர், கடிதம்அனுப்பினார். மேலும், வெளியுற வுத்துறை அமைச்சரை மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரில் சந் தித்து அழுத்தம் கொடுத்துள்ளனர்.


தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மார்ச் 10-ம் தேதி முதல் விமானம் வாயிலாக மீட்புப்பணிகள் தொடங்கியுள்ளன.


இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.