நாம் கொரோனாவை வென்று விட்டோமா? இந்திய மருத்துவ சங்கம், ஈரோடு கிளையின் தலைவர் டாக்டர்.சக்ரவர்த்தி மயிலேறு ரவீந்திரன் பதில்
லாக் டவுன் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் தமிழ் நாட்டில் மட்டும் 1.5 கோடி நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும்அவ்வாறு நடந்திருந்தால் மருத்துவம் சீர்குலைந்து விடும்.இன்று 1 சதவீதம் உள்ள இறப்பு விகிதம் 10 சதவீதமாக மாறியிருக்கும்.அதாவது நாம் 10 லட்சம் பேரை இழந்து இருப்போம்....
நமக்கு அளிக்கப்பட்ட தளர்வு நாம் ஊர் சுற்றவும், காலையில் வாக்கிங் என்ற பெயரில் முகக்கவசம் அணியாமல் செல்ல அல்ல நம் வறுமையை போக்கிட, நிதி நெருக்கடியை நாமே சரி செய்ய அரசாங்கம் கொடுத்த வாய்ப்பு.அதை சரியாக பயன்படுத்த வேண்டும்இப்பொழுது கொரோனாவில் இருந்து மீழ்வது மக்கள் கையில் உள்ளதுகோயம்பேடு நமக்கு ஒரு பாடம்.நம் கவனக்குறைவாலோ, அல்லது எனக்கு வராது என்ற குருட்டு தைரியத்தால் நமக்கு தொற்று ஏற்பட்டால் அது நம்மை நம்பி உள்ளவர்களையும் அது தாக்கும்.நாம் தொற்றில் இருந்து மீண்டு வந்தாலும் நம் வீட்டில் உள்ள பெரிவர்களுக்கு இதுவே ஆபத்தை விழைவிக்கும்.
நம் நலம் நம் கையில் தான் உள்ளது. லாக் டவுன் தளர்வு காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்முடிந்தவரை அலுவல் வேலைகளை வீட்டில் முடித்துவிட்டு முக்கிய காரணத்திற்காக மட்டும் வெளியே செல்லவேண்டும்அங்கும் சமூக இடைவெளி அவசியம்முகக்கவசம் கட்டாயம் தேவை.உடன் வேலை செய்வோர், பார்ட்னர், உயிர் நண்பன், தாய் மாமா என்று பாகுபாடு இல்லாமல் சமூக இடைவெளி அவசியம்காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு வாரம் ஒரு முறை மட்டும் செல்ல வேண்டும் அதுவும் ஒருவர் மட்டும்அங்கும் சமூக இடைவெளி அவசியம் 3 அடி கட்டாயம் தேவைமற்ற நேரம் வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும்இப்போதைக்கு வாக்கிங், அவுட்டிங், கோவில், பக்கத்து வீடு, நண்பன் பார்ட்டி என்று எதுவும் வேண்டாம்முக்கியமாக நெரிசலை தவிர்க்க வேண்டும்நம் ஆரோக்கியம் நம் கையில்நம் நாடு நம் கையில்விலகி இருப்போம் என்றுபிழைத்திருப்போம்இந்திய மருத்துவ சங்க ஈரோடு கிளை தலைவர் மரு.சக்ரவர்த்தி மயிலேறு ரவீந்திரன் கூறினார்
லாக் டவுன் தளர்வு என்பது மக்களின் வறுமையை போக்க அரசாங்கம் அளித்த வாய்ப்பு;இந்திய மருத்துவ சங்க ஈரோடு கிளை தலைவர்டாக்டர்.சக்கரவர்த்தி மயிலேறு ரவீந்திரன்