அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது;தமிழக அரசு


சென்னை,மே.22-
கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது. அரசு செலவில் வெளிநாடுகள் செல்ல அனுமதி கிடையாது உள்ளிட்ட உத்தரவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள அரசாணையில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களால், தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டு செலவின மதிப்பீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை ஈடுசெய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் அதிகாரிகளின் பயண செலவு, அலுவலகங்களுக்கு கொள்முதல் செய்யும் பொருட்கள் என பல்வேறு செலவினங்களை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டின் மொத்த செலவினத்தில் 20% செலவுகளை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசு விழாக்களில் வழங்கப்படும் சால்வை, பூங்கொத்து, நினைவு பரிசுகளைத் தவிர்க்க வேண்டும்.அதிகாரிகள் அரசு செலவில் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது.
அதிகாரிகள் விமானத்தில் உயர் வகுப்பில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.அரசு அதிகாரிகள் விமானத்தின் உயர்வகுப்பில் பயணிக்க கூடாது. பிற மாநிலங்களுக்கு விமானத்தின் சென்றாலும், அது ரயில் கட்டண அளவுக்கு அனுமதி வழங்கபடும்.
மாநிலத்துக்கு வெளியே பிற மாநிலங்களுக்கு விமானம் மூலம் பயணிக்கும் போது ரயில் கட்டணத்துக்கு இணையான கட்டணத்துக்கு மட்டுமே அனுமதி. அதிகாரிகளின் தினப்படி 25% குறைக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியான பணி மாற்றத்துக்கு மட்டுமே அனுமதி, பொதுவான பணி மாற்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.அலுவல் ரீதியான மதிய விருந்து, இரவு விருந்துகளை மறு உத்தரவு வரும் வரை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய துறைகளான சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மற்றும் அரசு உதவி அளிக்கும் திட்டங்களுக்கு மட்டும் உபகரணங்கள் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற துறைகள் உபரகணங்கள் கொள்முதல் செய்வதை ஓராண்டுக்கு ஒத்திவைக்கவும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே போல் அத்தியாவசிய துறைகளான சுகாதாரத்துறை, தீயணைப்பு, காவல்துறை, மிக மிக முக்கிய நபர்களுக்கான வாகனங்கள் மட்டும் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைய கணிணிகளை மட்டும் மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போல பல்வேறு செலவினங்களில் 25% முதல் 50 % வரை செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது
அலுவலக ரீதியாக விருந்து, மத்திய உணவு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளது. மேலும் கருணை அடிப்படையிலான பணிகள் மட்டும் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தலாம். மேலும் நடப்பு நிதியாண்டுக்கான பொதுவான பணியிட மறுதலைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றால் தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிதி சுமையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடு செய்யும் வகையில் மேற்கண்ட பல்வேறு நிதி சிக்கனங்களை அறிவித்துள்ளது